சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு - வுகான் நகரை சேர்ந்தவர்கள்


பீஜிங்:

சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது.


இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தாக்கி உள்ளது