30 கிலோ வெடுகுண்டுகளுடன் கார் - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை


ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கத்துடன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வருவதாக நேற்று இரவு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனைச் சாவடியில் அந்த காரை மடக்கினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் பாதுகாப்பு படையினர் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டான். பின்னர் காரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.  அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது